சென்னை: குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345 இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121 வரி தண்டலர் – 8 நில அளவர் – 532 வரைவாளர் – 327 தட்டச்சர் – 1714 சுருக்கெழுத்து தட்டச்சர் – 404 ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை செப்டம்பர் 8ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமான ரூ.75ஐ செலுத்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இது குறித்து மேலும் விபரம் அறிய மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.